சிறுமுகை காட்டில் யானை மிதித்து வனத் துறை காவலர் பலி

Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையம்:

சிறுமுகை காட்டுப் பகுதியில் வனத் துறை காவலர் ஒருவர் யானை மிதித்து பரிதாபமாக பலியானார்.

இந்தக் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாகத் தகவல் வந்தது.

இதையடுத்து 11 பேர் கொண்ட வனத் துறை ஊழியர்களும் காவலர்களும் காட்டுக்குள் சென்று இது குறித்துசோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது பெட்டிக்குட்டை பகுதியில் ஒரு பெரும் யானைக் கூட்டம் அவர்களை நோக்கி திமுதிமுவென்று ஓடிவந்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்ததும் வன ஊழியர்கள் அனைவரும் பதறி, சிதறி ஓட ஆரம்பித்தனர். இவர்களில் சுரேந்திரராஜாஎன்ற வனக் காவலர் மட்டும் அப்படி ஓடும் போது திடீரென்று ஒரு கல் தடுக்கி கிழே விழுந்து உருண்டார்.

அவர் மீண்டும் எழுந்து தப்பி ஓடுவதற்குள் அவரை மடக்கிய ஒரு யானை, தன் துதிக்கையால் சுரேந்திரராஜாவைத்தூக்கி எறிந்து மிதித்து நசுக்கியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார்.

பின்னர் அவருடைய உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டது.

யானை மிதித்து அவர் இறந்த சம்பவம் வன ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+