சென்னை விடுதியில் கேரள பெண்ணின் பிணம்
சென்னை:
சென்னை வட பழனியில் ஒரு விடுதி அறையில் அழுகிய இளம் பெண்ணின் பிணம் கிடந்தது. அவரைக் கொலை செய்த சுரேஷ்என்ற வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த விடுதிக்கு சுரேஷ் என்பவரும் இன்னொரு பெண்ணும் கடந்த 3 நாட்களுக்கு முன் வந்தனர். கேரள மாநிலம் திருச்சூரைச்சேர்ந்தவர்கள் என்று கூறி அங்கு தங்கினர்.
20ம் தேதி காலை அந்த வாலிபர் வெளியே புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் அறைக்குத் திரும்பவே இல்லை.
இந் நிலையில் நேற்று முதல் அவர் தங்கிருந்த அறையில் இருந்து அழுகிய துர்நாற்றம் வர ஆரம்பித்தது. இதையடுத்து விடுதியின்மேலாளர் போலீசுக்கு தகவல் தந்தார்.
போலீசார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது குளியலறையில் பெண் இறந்து கிடந்தார். அவரது உடலில் புழுக்கள்நெளிந்தன. அவர் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அதை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கொலையாளியைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டு கேரளா விரைந்துள்ளன.
-->












Click it and Unblock the Notifications