TVK Joining: "அன்பு மாப்பிள்ளை பர்வேஸ்!" Ex Minister to Anchor-ஆக மாறிய சி.விஜயபாஸ்கர்!எதிர்பார்க்காத அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: அன்பு மாப்பிள்ளை பர்வேஸ் என சி.விஜயபாஸ்கர் கூறியதுமே அரங்கமே அதிர்ந்தது. பர்வேஸ் ஆதரவாளர்களும் ஆர்ப்பரித்தனர். இன்றைய தினம் 10 ஆயிரம் பேர் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரத்தில் இருக்கும் ரிசார்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் அங்கிருந்து பலரும் தவெகவில் இணைகிறார்கள். இதுவரை 7 பேர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

C Vijayabaskar

அந்த வகையில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் 10 ஆயிரம் பேர் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அங்கு சி.விஜயபாஸ்கர் முன்கூட்டியே சென்று ஏற்பாடுகலை செய்தார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், "எல்லாம் அப்படியே உட்கார்ந்து ஒரு செல்பி எடுங்க. ஃப்ரீயா இருக்காம ஒரு செல்பி எடுங்க, அப்படியே எக்ஸ்ல, டிவிட்டர்ல, இன்ஸ்டால அடிச்சு விடுங்க! புதிய மாற்றம், புதிய மலர்ச்சி, புதிய மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, புதிய தொடக்கம், நல்ல தொடக்கம், நம்முடைய தொடக்கம்!

இன்னும் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர், இன்னும் 13 அமைச்சர் வராங்க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் வந்துட்டாங்க. எங்களுக்கு பக்கபலம்.

நம்முடைய மாவட்டத்தினுடைய அமைச்சர், மரியாதைக்குரிய என்னுடைய அன்பு மாப்பிள்ளை பர்வேஸ் ரொம்ப வேகமா வந்துட்டு இருக்காரு. மாப்பிள்ளை பர்வேஸ் நம்முடைய தொழிலாளர் நலத்துறை அமைச்சரை, அன்போடு வரவேற்கிறோம்.

அதேபோல கரூர் மாவட்டத்தினுடைய செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை வரவேற்கிறோம். இவ்வாறு விஜயபாஸ்கர் ஒரு ஆங்கரை போல் எல்லாரையும் வரவேற்றார், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினார். வரும் எம்எல்ஏக்களுக்கு வழிவிடுமாறு தெரிவித்தார்.

இது எல்லாவற்றையும் விட விஜயபாஸ்கர் வந்தால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடும் என பர்வேஸ் நினைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்று அன்பு மாப்பிள்ளை பர்வேஸ் என விஜயபாஸ்கர் அழைத்ததை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துள்ள நிலையில் விஜய் இந்த நிகழ்வுக்கு வரவில்லை, ஏற்கெனவே விஜய் தலைமையில் இணைய வேண்டும் என விஜயபாஸ்கர் விரும்பிய நிலையில், விஜய் அப்பாயிண்ட்மென்ட் கொடுக்காததால் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இணைகிறார். அது போல் விஜயபாஸ்கருக்கு பதவி குறித்தும் எந்த உத்தரவாதத்தையும் புஸ்ஸி ஆனந்த் கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

2000 பேர் அதிமுகவினர் இருந்த நிலையில் 1500 பேர் வெளியேறுகிறார்கள்.வெறும் 500 பேர் மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதை தடுக்க கதவுகள் அடைக்கப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

காலையில் பேருந்து, கார்கள் மூலம் மாமல்லபுரத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தவெகவில் இணைய வந்தவர்களுக்கு பொங்கல், வடை காலை உணவாக வழங்கப்பட்டது. மதியம் அசைவ உணவு வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால் வெளியேறும் அதிமுகவினர் வெளியே சென்று மதிய உணவு சாப்பிட செல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+