மதுரை: துணிப் பையில் கிடந்த ஒரு மாதக் குழந்தை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே துணிப் பையில் சுற்றப்பட்டுக் கிடந்த ஒரு மாதக் குழந்தையை போலீசார்மீட்டனர்.
மதுரையில் சமீப காலத்தில் அடிக்கடி பெற்ற குழந்தைகளை ஆங்காங்கே விட்டுவிட்டுச் சென்று விடும்பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் கூட மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தில் இண்டு குழந்தைகள் அநாதையாக விடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பெரியார் பஸ் நிலையம் அருகே துணிப் பையில் சுற்றப்பட்டு ஒரு மாதக் குழந்தை ஒன்று கிடந்தது.
அந்தக் குழந்தையை மீட்ட போலீசார் அதை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
-->












Click it and Unblock the Notifications