தமிழகத்தில் மீண்டும் கன மழை எச்சரிக்கை
சென்னை:
வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும்என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் இந்த மாதத் துவக்கத்தில் தான் ஒரு புயல் மையம் கொண்டு தமிழகத்தைப் பயமுறுத்தியது. இதன்விளைவாக மாநிலம் முழுவதும் பலத்த மழையும் பெய்தது. தலைநகரான சென்னையும் நாசக்காடாகியது.
ஆனாலும் பின்னர் புயல் ஆந்திரா, ஒரிசா வழியாகச் சென்று மேற்கு வங்காள மாநிலத்தில் கரை கடந்து, பலஉயிர்களைப் பலி வாங்கியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இந்தப் புயல் சின்னம்தற்போதும் ஆந்திராவை நோக்கித் திரும்பியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் கூறுகிறது.
இருந்தாலும் இந்தப் புயல் சின்னம் காரணமாக வடக்கு தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழைபெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுநிலையம் தெரிவித்துள்ளது.
கடல் மிகவும் கொந்தளிப்புடன் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம்என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-->