For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெற கர்நாடகம் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெரியார் திராவிட இயக்கத்தின் தலைவரான கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக அரசுமுடிவு செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் நாகப்பாவை விடுவிப்பதற்காக கொளத்தூர் மணியைத் தான் வீரப்பனிடம் தூதராக அனுப்பவேண்டும் என்று நேற்று நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து நேற்று மாலை நடந்த கர்நாடகஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் கர்நாடக செய்தி அமைச்சர் காகோடுதிம்மப்பா மற்றும் சட்ட அமைச்சர் சந்திரே கெளட ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, மனிதாபிமான அடிப்படையில் நாகப்பாவைபத்திரமாக மீட்பதற்காக கொளத்தூர் மணியையே தூதராக அனுப்ப அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொளத்தூர் மணி மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று அவரை விடுதலை செய்வதுஎன்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர்கள்கூறினர்.

கொளத்தூர் மணியைத் தான் தூதராக அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் பிடிவாதமாக உள்ளதால் அவர் மீதானவழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற முடிவு செய்து விட்டது கர்நாடக அரசு.

இந்நிலையில் கொளத்தூர் மணியின் வழக்கறிஞர் துரைசாமியும், அவருடைய தம்பி பழனிச்சாமியும் இன்றுபெங்களூர் விரைந்தனர். கொளத்தூர் மணியை விடுவிப்பது குறித்து கர்நாடக அரசு உயர் அதிகாரிகளிடம்அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

P uUS v {ut;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X