இலங்கை: நாளை ஓஸ்லோவில் நிதி திரட்டும் மாநாடு
ஓஸ்லோ:
வடக்கு இலங்கையின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் மாநாடு நாளை நார்வேயின்தலைநகரான ஓஸ்லோவில் நடைபெறுகிறது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமாதானப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, தற்போதுசமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு இலங்கையில் அவர்களுடையகுடியிருப்புப் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதி திரட்டும் மாநாடு ஒன்றுக்கு நார்வே தூதுக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தங்களுடைய நாட்டின் தலைநகரான ஓஸ்லோவிலேயே இந்த மாநாடு நடைபெறும் என்றும் நார்வே தூதுக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி நாளை ஓஸ்லோவில் இம்மாநாடு நடைபெறுகிறது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகள் கலந்து கொள்கின்றன.
இந்தியாவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு விரும்பியது. இதைவலியுறுத்துவதற்காக இலங்கை பொருளாதாரச் சீரமைப்புத் துறை அமைச்சரான மெலின்டா மொரகோடாசமீபத்தில் டெல்லி சென்றார்.
ஆனால் அவரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா, ஏற்கனவே வடக்கு,கிழக்கு இலங்கையின் சீரமைப்புப் பணிகளுக்காக இந்தியா நிதியுதவி அளித்ததை மொரகோடாவிடம் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஓஸ்லோ மாநாட்டில் நார்வே நாட்டுக்கான இந்தியத் தூதர் கோபாலகிருஷ்ண காந்தி பங்கு கொள்வார்என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
அதாவது, வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளில் ஒரு நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களும் கலந்துகொள்வது வழக்கம். அவர்கள் பார்வையாளர்கள் பகுதியில் தான் பொதுவாக அமர்ந்திருப்பார்கள்.
அது போலவே இந்தியத் தூதரும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார் என்று யஷ்வந்த் சின்ஹா கூறாமல்கூறிவிட்டார்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் நாங்கள் புலிகளுடன் நெருங்கி வருவதாக அர்த்தம்கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவின் தீவிரவாதிகளின் பட்டியலிலும் புலிகளின் பெயர் தொடர்ந்து இருக்கும் என்று இலங்கைக்கானஅமெரிக்கத் தூதர் ஆஷ்லே வில்லிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சரான ரிச்சர்டு ஆர்மிடேஜ் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications