இலங்கை: நாளை ஓஸ்லோவில் நிதி திரட்டும் மாநாடு
ஓஸ்லோ:
வடக்கு இலங்கையின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் மாநாடு நாளை நார்வேயின்தலைநகரான ஓஸ்லோவில் நடைபெறுகிறது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமாதானப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, தற்போதுசமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு இலங்கையில் அவர்களுடையகுடியிருப்புப் பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதி திரட்டும் மாநாடு ஒன்றுக்கு நார்வே தூதுக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தங்களுடைய நாட்டின் தலைநகரான ஓஸ்லோவிலேயே இந்த மாநாடு நடைபெறும் என்றும் நார்வே தூதுக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி நாளை ஓஸ்லோவில் இம்மாநாடு நடைபெறுகிறது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகள் கலந்து கொள்கின்றன.
இந்தியாவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு விரும்பியது. இதைவலியுறுத்துவதற்காக இலங்கை பொருளாதாரச் சீரமைப்புத் துறை அமைச்சரான மெலின்டா மொரகோடாசமீபத்தில் டெல்லி சென்றார்.
ஆனால் அவரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா, ஏற்கனவே வடக்கு,கிழக்கு இலங்கையின் சீரமைப்புப் பணிகளுக்காக இந்தியா நிதியுதவி அளித்ததை மொரகோடாவிடம் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஓஸ்லோ மாநாட்டில் நார்வே நாட்டுக்கான இந்தியத் தூதர் கோபாலகிருஷ்ண காந்தி பங்கு கொள்வார்என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
அதாவது, வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளில் ஒரு நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களும் கலந்துகொள்வது வழக்கம். அவர்கள் பார்வையாளர்கள் பகுதியில் தான் பொதுவாக அமர்ந்திருப்பார்கள்.
அது போலவே இந்தியத் தூதரும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார் என்று யஷ்வந்த் சின்ஹா கூறாமல்கூறிவிட்டார்.
இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் நாங்கள் புலிகளுடன் நெருங்கி வருவதாக அர்த்தம்கொள்ளக் கூடாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவின் தீவிரவாதிகளின் பட்டியலிலும் புலிகளின் பெயர் தொடர்ந்து இருக்கும் என்று இலங்கைக்கானஅமெரிக்கத் தூதர் ஆஷ்லே வில்லிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணை அமைச்சரான ரிச்சர்டு ஆர்மிடேஜ் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.