சு. சுவாமி எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெரியார் திராவிட இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது என்றகர்நாடக அரசின் முடிவை ஜனதா கட்சியின் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி கடுமையாக எதிர்த்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளான சிவராசன் மற்றும் சுபாஆகியோரை பெங்களூருக்கு தப்ப வைத்ததே கொளத்தூர் மணி தான்.
இது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை கூட நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கொளத்தூர் மணி மீதான வழக்குகளை வாபஸ் பெறப் போவதாக அறிவித்துள்ளது கடும்கண்டனத்திற்குரியது.
கர்நாடக அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் சுவாமி.
-->












Click it and Unblock the Notifications