மோசடி லாட்டரி: காங். மாஜி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ரெய்ட்
சென்னை:
தடை செய்யப்பட்ட லாட்டரிகளைப் பதுக்கி வைத்திருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜே.எம். ஹாரூணின் அலுவலகத்தில்போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கிருந்து பல லட்சம் மதிப்புள்ள பதுக்கல் லாட்டரிச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜே.எம்.ஹாரூண் தமிழகத்தின் முக்கிய லாட்டரி புள்ளிகளில் ஒருவர். மேலும் வெளிநாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்தும்விற்று வருகிறார்.
பெரும் பண பார்ட்டியான இவர் காங்கிரஸ் கட்சியில் உள்ளார். தனது பண பலத்தை வைத்தே 1996ம் ஆண்டு தேர்தலில் சீட்வாங்கினார். பூந்தமல்லியில் போட்டியிட்டு பணத்தை வாரி இறைத்து வென்றார்.
இந் நிலையில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளையும், சுரண்டல், ஒரு நம்பர் லாட்டரிகளையும் விற்று வரும் ஆட்களை போலீசார்வளைக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ளபதுக்கல் லாட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந் நிலையில் இன்று ஜே.எம். ஹாரூணின் அலுவலகத்திலும் அவரது லாட்டரி அச்சடிக்கும் பிரஸ்சிலும் சிபிசிஐடி போலீசாரும்சேல்ஸ் டாக்ஸ் அதிகாரிகளும் கூட்டாக அதிரடி ரெய்டு நடத்தினர்.
அங்கிருந்து பல மூட்டை பதுக்கல் லாட்டரிகளை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
-->












Click it and Unblock the Notifications