For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"எதிரிகளுக்கு ரத்த அபிஷேகம் செய்வோம்": கோர்ட்டில் தீவிரவாதிகள் கோஷம்

By Staff
Google Oneindia Tamil News

தருமபுரி:

"எங்களுடைய தோழர்களைப் போலீசார் கொன்று குவிக்கின்றனர். அடக்குமுறைக்கு நாங்கள் பணியமாட்டோம்.எதிரிகளுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்வோம்" என்று கைது செய்யப்பட்ட நக்சலைட் தீவிரவாதிகள் நீதிமன்றவளாகத்தினுள் கோஷம் போட்டனர்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் மூன்று பேர் நேற்று ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி அசோகன் உத்தரவிட்டார்.

பின்னர் மற்ற தீவிரவாதிகளை நேற்று மாலை போலீசார் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கை நிருபர்களைக் கண்டதும் தீவிரவாதிகள் கோஷம் எழுப்பத்தொடங்கினர்.

"தமிழகத்தில் யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அனைவருக்கும் வேலை கொடுத்தே ஆக வேண்டும். எங்கள்தோழர்களைப் போலீசார் கொன்று குவிக்கின்றனர்.

இந்த அடக்குமுறைக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். எங்களை யாராலும் அடக்க முடியாது.

எதிரிகளுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்வோம். போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிவாவுக்கு வீர வணக்கம்.அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவோம்" என்று தீவிரவாதிகளில் ஒருவரான மதுரை சுரேஷ் கோஷம்போட்டார்.

ஊத்தங்கரை நீதிபதி அப்போது அங்கு இல்லாததால் தீவிரவாதிகள் அனைவரும் அரூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அங்கு இப்போது பெண் தீவிரவாதிகள் கோஷம் எழுப்பத் தொடங்கினர். சத்யமேரி, ஜெயந்தி மேரி, ரீட்டா மேரிமற்றும் ஆனந்தி ஆகிய நான்கு பெண் தீவிரவாதிகளும் "தியாகி சிவா வாழ்க" (?) என்று சத்தம் போட்டு கோஷம்எழுப்பினர்.

இவர்களில் ஆனந்தியைத் தவிர மற்ற மூன்று பெண்களுமே மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சுரேஷ், தங்கபாண்டியன் ஆகிய இரண்டு ஆண் தீவிரவாதிகளும் மதுரையைச் சேர்ந்தவர்கள் தான்என்பதும் தெரிய வந்துள்ளது.

தீவிரவாதிகளில் ஒருவன் ஹோமியோபதி டாக்டர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் அனைவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X