For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேவர் சிலை உடைப்பு: ராமநாதபுரத்தில் பெரும் பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டு, அதன் மீது சாணியும் பூசப்பட்டிருந்ததால் அங்கு பெரும் பதற்றமும்பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. கல்வீச்சும் கலாட்டாவும் நடந்ததால் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன.

நேற்று இரவு தேவர் சிலையை யாரோ உடைத்துள்ளனர். மேலும் அதன் மீது சாணியையும் பூசியிருந்தனர். இன்றுகாலை இந்த விவரம் வெளியே பரவத் தொடங்கியதும் நகர் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

தேவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முக்குலத்தோர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்கள், கார்கள் மீதுகற்கள் வீசப்பட்டன.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. கடைகள் அனைத்தும்அடைக்கப்பட்டன.

தொடர்ந்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான போலீசார் அங்குகுவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாதிக் கலவரத்துக்குப் பெயர் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் தேவர் பிறந்தநாளின்போது பசும்பொன் அருகே அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது. தலித் காலனி வழியாகச்சென்ற சிலர் அவர்களது ஜாதியைச் சொல்லி கேலி செய்துவிட்டு சிலையை உடத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதற்குபதிலடியாகவே தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X