For Daily Alerts
Just In
புதிய காஞ்சி ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியது
சென்னை:
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் திறக்கப்பட்டது. இதையடுத்து இந்த ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் ரயில்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-திருப்பதி எக்ஸ்பிரஸ், மதுரை-மும்பை எக்ஸ்பிரஸ், காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை மின்சார ரயில்,அரக்கோணம்-விழுப்புரம் பாசஞ்சர், செங்கல்பட்டு-அரக்கோணம் பாசஞ்சர், அரக்கோணம்-செங்கல்பட்டுபாசஞ்சர் உள்ளிட்ட 12 ரயில்கள் இந்தப் புதிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
புதிய ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளதால், பழைய ரயில் நிலையத்தில் இனி ரயில்கள் நிற்காது.
மேலும், அங்கு செயல்பட்டு வந்த முன்பதிவு கவுண்டரும் புதிய நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.டிக்கெட்டுகள் இனி இங்குதான் கொடுக்கப்படும்.
-->
Comments
Story first published: Tuesday, November 26, 2002, 5:30 [IST]