இட்லியில் மயக்க மருந்து கலந்து நகைகளை கொள்ளையடித்த 2 "பலே" பெண்கள்
சென்னை:
ஒரு பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த இட்லியைக் கொடுத்து சாப்பிடச் செய்து, பின்னர் அவரிடமிருந்து 5 பவுன்நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 2 பெண்களை சென்னை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை-பல்லாவரம் அருகே உள்ள பம்மல்லைச் சேர்ந்தவர் அல்லி. இவர் இன்று காலை ஒரு வேலையாகசென்னை பல் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.
அப்போது அவரிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்த இரண்டு பெண்கள், அந்தப் பெண்ணுக்கு சாப்பிடுவதற்காகஇட்லியும் கொடுத்தனர்.
இட்லியில் மயக்க மருந்து கலந்திருப்பது தெரியாத அல்லி, அந்தப் பெண்கள் காட்டிய "அன்பில்" நெகிழ்ந்து போய்மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டார். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அல்லி மயக்கமானார்.
இதையடுத்து அல்லியின் உறவினர்கள் என்று கூறிக் கொண்ட அந்தப் பெண்கள் அவரையும் ஒரு ஆட்டோவில்ஏற்றிக் கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.
பின்னர் அல்லி அணிந்திருந்த சுமார் 5 பவுன் நகைகளை உருவிக் கொண்ட அந்தப் பெண்கள், அல்லியின் பர்சில்வைத்திருந்த ரூ.750 பணத்தையும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து மயங்கிய நிலையிலேயே இருந்தஅல்லியை உயர் நீதிமன்ற சுவருக்கு அருகில் இறக்கி விட்டுத் தப்பி விட்டனர்.
சிறிது நேரம் கழித்து அந்தப் பக்கமாக வந்த சட்டக் கல்லூரி போலீசார் மயங்கிக் கிடந்த அல்லியை மீட்டு அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு மயக்கம் தெளிந்த பிறகு தான் இவ்வளவு விவரங்களும் தெரிய வந்தன. தன்னை அந்த இரண்டுபெண்களும் ஏமாற்றிக் கொள்ளையடித்ததைப் போலீசாரிடம் கூறினார் அல்லி.
இதையடுத்து தப்பியோடிய இரண்டு பெண் கொள்ளையர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
10,000 பாக்கெட் கள்ளச் சாராயம் பறிமுதல்:
இதற்கிடையே சென்னையில் 10,000 பாக்கெட் கள்ளச் சாராயத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மகாகவி பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சில வீடுகளில் போலீசார் இன்று காலைஅதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 10,000 பாக்கெட் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துஅவற்றைப் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications