திண்டுக்கல்: பண்ணை வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ஒரு பண்ணை வீட்டில் வயதான ஒரு பெண்ணையும் வாயிற்காவலர்களையும் தாக்கிய 4முகமூடிக் கொள்ளையர்கள் அங்கு திருடுவதற்கு ஏதும் இல்லாததால் ஏமாந்து போய் தப்பியோடி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ். புதுக்கோட்டை கிராமத்தில் ஒரு பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணைவீட்டை சில காவலர்கள் காவல் காத்து வந்தனர்.
நேற்று இரவு காவலர்களும், ஒரு வயதான பெண்ணும் இந்த வீட்டின் வாசல் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்கள் வந்து, அங்கிருந்த காவலர்களை மரத்தடியால்பயங்கரமாகத் தாக்கினர். இதில் அனைத்துக் காவலர்களுமே படுகாயமடைந்து மயங்கிச் சாய்ந்தனர்.
பின்னர் அந்த வயதான பெண்ணிடமிருந்த சில நகைகளைப் பறித்துக் கொண்ட கொள்ளையர்கள் பண்ணைவீட்டின் சாவியைக் கொடுக்கும் படி மிரட்டினர். சாவியைக் கொடுக்க அவர் மறுக்கவே, கொள்ளையர்கள் அந்தவீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
ஆனால் உள்ளே சென்ற கொள்ளையர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கொள்ளையடிப்பதற்கென்று எந்தப்பொருளும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாந்து போன முகமூடிக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். கொள்ளையர்கள்தாக்குதலால் காயமடைந்த காவலர்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப் படை அமைத்து தப்பியோடிய முகமூடிக்கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications