நார்வே மாநாடு முழுத் தோல்வி: சுப்பிரமணியம் சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த இலங்கை மறுசீரமைப்புக்கான நிதியுதவி செய்யும் மாநாடு பெரும் தோல்விஅடைந்துவிட்டதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சர்வதேச மாநாடு என்று சொல்லிக் கொண்டு நார்வேயில் கூட்டம் போட்டார்கள். இதில் 40 நாடுகளும் பங்கேற்றன. ஆனால்,இதில் இலங்கைக்கு வெறும் 60 மில்லியன் டாலர்கள் தான் உதவித் தொகை தர அந்த நாடுகள் முன் வந்தன. இதனால் அந்தக்கூட்டமே பெரும் தோல்வி கண்டுவிட்டது.

மேலும், அந்தக் கூட்டத்தில் தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் முயற்சி நடந்தது. அதுவும்தோல்வியடைந்துவிட்டது.

இந்திய அரசும் புத்திசாலித்தனமாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. விடுதலைப் புலிகள் பங்கேற்கும் ஒரு கூட்டத்தில்வெளியுறவுத்துறை அதிகாரி யாரையாவது பங்கேற்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருந்தால் அவர் மீதுபொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

தீவிரவாதிகளான விடுதலைப் புலிகளிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே சரணடைந்துவிட்டார். இதனால்இந்தியாவுக்கு எந்தக் கவலையும் இல்லை.

இலங்கையின் இனப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி அந்த நாட்டை இந்தியாவுடன் இணைத்துவிடுவது தான்.

இவ்வாறு சுவாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நார்வேயில் இந்த மாநாடு நடந்த தினத்தன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், இந்த மாநாட்டில் இந்தியப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

அடுத்ததாக டோக்கியோவில் நடக்கவுள்ள நிதியுதவி செய்யும் நாடுகள் மாநாட்டில் மேலும் பல நாடுகள் கலந்து கொள்ளஉள்ளன. அப்போது இலங்கையின் வட கிழக்குப் பகுதி சீரமைப்புக்கு கூடுதல் நிதி குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+