For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி மாளிகையில் திருவள்ளுவர் சிலை: கலாம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஜனாதிபதி மாளிகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ டாக்டர் அப்துல் கலாம் முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் தன்னைச் சந்தித்த கணபதி ஸ்தபதியிடம் (கன்னியாகுமரி கடலில் 133 அடி வள்ளுவர் சிலையை அமைத்தவர்)ஜனாதிபதி மாளிகையில் வள்ளுவர் சிலையை அமைக்குமாறு கலாம் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாளிகையில் சிலையை வைக்க வேண்டிய இடத்தை ஸ்தபதியே தேர்வு செய்தார்.

பின்னர் சிலையை அனைத்து மத, இன மக்களின் பொருளுதவியுடன் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. சிலையை வெண்கலத்தில்செய்வது என்றும் திட்டமிடப்பட்டது.

இதன்படி சக்தி நிறுவனங்களின் தலைவரும் ஆன்மிகவாதியுமான பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கர்நாடகத்தில் உள்ளதர்மஸ்தலா மஞ்சு நாதேஸ்ரர் அறக்கட்டளையின் தலைவர் வீரேந்திர ஹெக்டே, கோட்டாறு கத்தோலிக்க கிருஸ்துவத்திருச்சபையின் ஆயர் டாக்டர் லியோன் அ. தர்மராஜ், நாகர்கோவில் ஷாஜஹான்ஸ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஷாஜகான்ஆகியோரின் பொருள் உதவியுடன் இந்தச் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

வெண்கலத்தாலான இந்தச் சிலையை கிருஷ்ணன்கோவில் சிற்பி செல்வராஜா வார்த்து வருகிறார்.

2003ம் ஆண்டு திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ம் தேதி இந்தச் சிலை திறக்கப்பட உள்ளது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X