மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் ரகளை: மேயர் வெளியேறினார்
மதுரை:
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களைஅடக்க வெளியே நின்று கொண்டிருந்த போலீசாரை அழைத்தபோது அவர்கள் வராததால் கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு மேயர் செ. ராமச்சந்திரன் வெளியேறினார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு ராமச்சந்திரன் அளித்திருந்த பேட்டியில், மதுரை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்குவதில்தமிழக முதல்வர் ஜெயலலிதா மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்குஅதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று கூடிய மாநிகராட்சிக் கூட்டத்தின்போது, மேயர் தனது குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர்கள் கூறினர்.
மேலும் மேயர் இருக்கை முன்பு நின்று கொண்டு அவரைப் பேச விடாமலும் அதிமுக கவுன்சிலர்கள் தடுத்தனர்.
அதிமுக கவுன்சிலர்களின் இந்த செயலை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கடுமையாகக்கண்டித்தனர்.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த மேயர், அதிமுக கவுன்சிலர்களை வெளியேற்றுமாறு போலீஸாருக்குஉத்தரவிட்டார். ஆனால் வாசலில் நின்று கொண்டிருந்த போலீஸார் உள்ளே வர மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து சபையில் கொண்டு வரப்பட்ட சில தீர்மானங்கள் நிறைவேறியதாக அறிவித்து விட்டு மேயர்ராமச்சந்திரன் மடமடவென்று சபையை விட்டு வெளியேறினார்.
ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அதிமுக கவுன்சிலர்களைக் கண்டித்து சபைக்கு வெளியே கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள்ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து சபைக்கு வெளியிலும் பரபரப்பும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. மொத்தத்தில் இந்தச் சம்பவங்களால்மதுரை மாநகராட்சியில் இன்று பெரும் பதற்றம் ஏற்பட்டது.
-->