ஆசியா- ஐரோப்பா இடையே புதிய விமானப் பாதை
டெல்லி:
இன்று காலை 7.30 மணி முதல் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான விமானப் பாதைகளில் பெரிய மாற்றம்செய்யப்பட்டுள்ளது..
நாடுகளின் மீது விமானங்கள் பறக்கும்போது அவற்றின் ராணுவப் பகுதிகள் மீது பறக்க பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன.ராணுவக் கட்டுப்பாடு உள்ள பகுதிகளின் மீது விமானங்கள் பறக்க முடியாது. இந்த எல்லைகளைச் சுற்றிக் கொண்டு தான்விமானங்கள் பறந்தாக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இதனால் பல நாடுகளின் மீது விமானங்கள் பறக்கும்போது ராணுவப் பகுதிகளைத் தவிர்ப்பதற்காக வீணாக சுற்றிச் செல்லவேண்டியுள்ளது.
இதைத் தவிர்க்க சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் ஆசிய, ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சு நடத்தியது. கிட்டதட்ட 21நாடுகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அந்த நாடுகளின் அரசுகள் தவிர ராணுவங்கள், விமானப் படைகள், விமானநிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து தங்கள் நாட்டின் மீது பறக்க இருந்த கட்டுப்பாடுகளை இந்த நாடுகள் நீக்கின. இதனால்ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பறக்கும் விமானங்கள் நேர் கோட்டில் பறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சராசரியாக பயணத்தில் 30 நிமிடங்கள் மிச்சமாகும். இதன் மூலம் ஆண்டுதோறும் விமான நிறுவனங்கள் 55 மில்லியன்டாலர் அளவுக்கு எரிபொருளையும் சேமிக்க முடியும்.
இந்த புதிய விமானப் பாதைகளின் செயல்பாடு இன்று காலை 7.30 மணி முதல் அமலில் வந்தது. இதனால் ஆஸ்திரேலியா,ஆசியா, மேற்காசியா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு இடையே புதிய பாதையில் விமானங்கள் பறக்க ஆரம்பித்துள்ளன.
சிங்கப்பூர், கோலாலம்பூர், பேங்காக் ஆகிய இடங்களில் இருந்து ஐரோப்பா செல்லும் விமானங்கள் இதில் பெரும் பயனடையஉள்ளன.
-->












Click it and Unblock the Notifications