ஏரியில் புதைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தேனிகனிக்கோட்டை பகுதியில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த 13 பயங்கர பைப்வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
ஊத்தங்கரை காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளைத் தேடும் வேட்டை தொடர்ந்து வருகிறது. இந் நிலையில்தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஏரியில் நடந்த சோதனையின்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த 13 பைப்வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பயங்கர சக்தி வாய்ந்தவை.
இரும்புக் குழாய், பேட்டரி, வயர்கள், ஆணிகள், ஸ்குரூக்கள், வெடிமருந்து, பசை இதை வைத்து இந்த பைப் குண்டுகளைத்தயாரித்துவிட முடியும். கடிகாரத்துடன் சேர்த்து டைம் பாம் ஆகவும் இதை மாற்றிவிட முடியும்.
காட்டுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட இந்த குண்டுகள் அனைத்தும் சாமனப்பள்ளி மலைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. சென்னையிலிருந்து வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தண்ணீர் தொட்டிகளில் மூழ்க வைக்கப்பட்டு இந்த குண்டுகளை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குண்டுகள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வெடிகுண்டு நிபுணர்கள்கருதுகின்றனர்.
இதனால் இங்கு நக்சல்கள் செயல்பாடு பல ஆண்டுகளாகமாக இருந்து வந்துள்ளது உறுதியாகிறது.
தனிப் பிரிவு அமைப்பு:
தமிழகத்தில் நக்சலைட்டுகள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், அவர்களைக் கட்டுப்படுத்தவும் தனிப் பிரிவை அரசு ஏற்படுத்தியுள்ளது.
இத் தகவலை உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications