32ஐ டீஸ் செய்த 45 கைது
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பஸ்சுக்காக காத்து நின்ற ஆசிரியையை ஈவ் டீசிங் செய்ததாக 45 வயது நபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெசிந்தா (வயது 32). இவர் திருச்செந்தூரில் தனியார் பள்ளியில்ஆசிரியையாக உள்ளார். பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்து நின்றார் ஜெசிந்தா.
அப்போது திருச்செந்தூரைச் சேர்ந்த யோகராஜ் (வயது 45) என்பவர் ஜெசிந்தாவைப் பார்த்து கேலி செய்தார்.இதையடுத்து ஜெசிந்தா திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து யோகராஜைக் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications