For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைகோர்க்கும் பரம எதிரிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எதிரும், புதிருமாக இருந்த புதிய தமிழகம் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் கட்டாய மதமாற்றத்தடைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கைகோர்த்து செயல்படத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புதியகோணத்துடன் பார்க்கப்படுகிறது.

தலித் மக்களிடையே பிரபலமாக உள்ள கட்சிகள் புதிய தமிழகமும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும்.

தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உள்ளது. அதேபோல, வட மாவட்டங்களில்விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மிகவும் பிரபலமாக உள்ளது.

தலித் கட்சிகளாக இருந்தபோதிலும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச்சிறுத்தைகளின் திருமாவளவனும் பரம எதிரிகளாகவே இருந்து வந்தனர். இரு கட்சிகளும் முரண்பட்டகருத்துக்களையே கொண்டுள்ளன.

இந்த நிலையில் சமீப காலமாக புதிய தமிழகம் கட்சியின் செல்வாக்கில் தேய்மானம் ஏற்படத் தொடங்கியது. மாறாகவிடுதலைச் சிறுத்தைகளுக்கு செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது.

தென் மாவட்டங்களில் அடையாளமே இல்லாமல் இருந்த விடுதலைச் சிறுத்தைகளுக்காக தற்போது பலபகுதிகளில் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் திருமாவளவன் ஜெயித்து, டாக்டர்கிருஷ்ணசாமி தோற்றதும் இதற்குப் பெருமளவில் உதவியது.

தலித் மக்களுக்காக செயல்படுவதால் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தலித்மக்களின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்று இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களும், பிற தலித்பிரமுகர்களும் இருவரையும் வலியுறுத்தி வந்தனர்.

அவர்களது யோசனைக்கு இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத் தடுப்புச்சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. வரும் 9ம் தேதி சென்னையில்மாபெரும் பேரணி நடத்தவுள்ளன.

இந்தப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகமும் கலந்து கொள்ளவுள்ளன. இந்த அறிவிப்பைசிறுபான்மை அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் புடை சூழ திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும்அறிவித்துள்ளனர்.

தலித் மக்களிடையே புகழ் பெற்ற இரு தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்திருப்பது அரசியல் ரீதியிலும் பல்வேறுபேச்சுக்களைக் கிளப்பியுள்ளது. மதமாற்றத் தடைச் சட்ட போராட்டம் மட்டுமல்லாது, எதிர்காலத்திலும் இருதலைவர்களும் சேர்ந்து செயல்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இரு தலைவர்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து கைகோர்த்திருப்பது தலித் மக்களிடையே பெரும்உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலித் மக்களின் குரல் இனிமேல் மிகவும் உறுதியாகவும், ஒரே குரலாகவும் ஒலிக்கும் என்று அவர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 20 சதவீதத்துக்கும் அதிகமான தலித் இன மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X