கைகோர்க்கும் பரம எதிரிகள்
சென்னை:
எதிரும், புதிருமாக இருந்த புதிய தமிழகம் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் கட்டாய மதமாற்றத்தடைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கைகோர்த்து செயல்படத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புதியகோணத்துடன் பார்க்கப்படுகிறது.
தலித் மக்களிடையே பிரபலமாக உள்ள கட்சிகள் புதிய தமிழகமும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும்.
தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உள்ளது. அதேபோல, வட மாவட்டங்களில்விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு மிகவும் பிரபலமாக உள்ளது.
தலித் கட்சிகளாக இருந்தபோதிலும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச்சிறுத்தைகளின் திருமாவளவனும் பரம எதிரிகளாகவே இருந்து வந்தனர். இரு கட்சிகளும் முரண்பட்டகருத்துக்களையே கொண்டுள்ளன.
இந்த நிலையில் சமீப காலமாக புதிய தமிழகம் கட்சியின் செல்வாக்கில் தேய்மானம் ஏற்படத் தொடங்கியது. மாறாகவிடுதலைச் சிறுத்தைகளுக்கு செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்தது.
தென் மாவட்டங்களில் அடையாளமே இல்லாமல் இருந்த விடுதலைச் சிறுத்தைகளுக்காக தற்போது பலபகுதிகளில் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் திருமாவளவன் ஜெயித்து, டாக்டர்கிருஷ்ணசாமி தோற்றதும் இதற்குப் பெருமளவில் உதவியது.
தலித் மக்களுக்காக செயல்படுவதால் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தலித்மக்களின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்று இரு கட்சிகளையும் சேர்ந்த முக்கியஸ்தர்களும், பிற தலித்பிரமுகர்களும் இருவரையும் வலியுறுத்தி வந்தனர்.
அவர்களது யோசனைக்கு இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத் தடுப்புச்சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. வரும் 9ம் தேதி சென்னையில்மாபெரும் பேரணி நடத்தவுள்ளன.
இந்தப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகமும் கலந்து கொள்ளவுள்ளன. இந்த அறிவிப்பைசிறுபான்மை அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் புடை சூழ திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும்அறிவித்துள்ளனர்.
தலித் மக்களிடையே புகழ் பெற்ற இரு தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்திருப்பது அரசியல் ரீதியிலும் பல்வேறுபேச்சுக்களைக் கிளப்பியுள்ளது. மதமாற்றத் தடைச் சட்ட போராட்டம் மட்டுமல்லாது, எதிர்காலத்திலும் இருதலைவர்களும் சேர்ந்து செயல்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இரு தலைவர்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து கைகோர்த்திருப்பது தலித் மக்களிடையே பெரும்உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலித் மக்களின் குரல் இனிமேல் மிகவும் உறுதியாகவும், ஒரே குரலாகவும் ஒலிக்கும் என்று அவர்கள் நம்பிக்கைதெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 20 சதவீதத்துக்கும் அதிகமான தலித் இன மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
திருமாவிடம் அந்த கேள்வியை.. தனியாக போன் போட்டு கேட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? இவ்வளவு நடக்குதா? -
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
87 ஓட்டுகளில் கையை விட்டு போன காட்டுமன்னார்கோவில்! 10 ஆண்டு கழித்து மீண்டும் திருமாவளவன் போட்டி! -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications