திமுக பிரமுகர் கொலை வழக்கு: போலீஸ் மீது ஸ்டாலின் புகார்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த திமுக பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறைமெத்தனம் காட்டுவதாக திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதி திமுக பிரகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சின்னக் கண்ணு படுகொலைசெய்யப்பட்டார்.
அவரது உடலுக்கு ஸ்டாலின் இன்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில்,
விருகம்பாக்கம் பகுதியில் திமுகவின் வளர்ச்சிக்காக கடுமையாக பாடுபட்டு, கட்சியின் தூணாக விளங்கியவர்சின்னக்கண்ணு. அவர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
ஆனால் கொலையாளிகளைப் பிடிப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது. அப்படி இல்லாமல் முறையாகச்செயல்பட்டு உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும்.
இதை திமுக சார்பிலேயே போலீசாரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
-->












Click it and Unblock the Notifications