மதுரை மனோதத்துவ டாக்டருக்கு வாழ்நாள் சாதனை விருது
மதுரை:
மதுரையின் பிரபல மனோதத்துவ நிபுணரான டாக்டர் வெங்கோப ராவ், வாழ்நாள் சாதனை விருது பெற தேர்வுசெய்ய்பட்டுள்ளார்.
மனவியல், உளவியல், மூளை- நரம்பியல் ஆராய்ச்சிகளில் அவர் படைத்த சாதனைகளுக்காக இந்த வாழ்நாள் சாதனைவிருது வழங்கப்படுகிறது.
நாட்டில் மனவியல் ஆராய்ச்சியில் டாக்டர்கள் ஈடுபடுவது மிகக் குறைவாக இருந்த காலத்திலேயே மூளை ஆராய்ச்சியில்ஈடுபட்டவர் ராவ். இதுவரை ஆயிரக்கணக்கான மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தந்துள்ளார்.
360 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 15 ஆராய்ச்சிப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். பல நாடுகளில் தனது ஆய்வு அறிக்கைகளைதாக்கல் செய்துள்ளார்.
மன அழுத்தம், முதிய வயதில் ஏற்படும் மன நோய்கள், தற்கொலை மனநிலை, சமூக உளவியல் ஆகியற்றில் சிறப்புக் கவனமும்சிகிச்சையும் அளித்து வருகிறார். மேலும் பரம்பரைரீதியில் மனநலம் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணர்இவர்.
கிராமப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட மனரீதியிலான பிரச்சனைகளுக்கு சிகிச்சை தரும் முறையைஅறிமுகப்படுத்தியவர் இவர்.
டி.எஸ். சீனிவாசன் நரம்பியல் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இவருக்கு இந்த வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படுகிறது.
-->