For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலகங்காவை சென்னை மேயராக அறிவிக்க அதிமுக வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி மேயராக அதிமுகவைச் சேர்ந்த பாலகங்காவை அறிவிக்க வேண்டும் என்று கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. டாக்டர் மைத்ரேயன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக மைத்ரேயன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஸ்டாலினிடமிருந்து சென்னை மேயர் பதவிபறிக்கப்பட்டது. அவர் 2வது முறையாக மேயராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கோர்ட் கூறியிருந்தது.

இதனால் ஸ்டாலினிடம் இருந்து மேயர் பதவியை அரசு பறித்தது சரி தான் என்று நீதிமன்றம் கூறியது.

இப்போது மேயர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் நடக்கவுள்ளது. துணைமேயர் கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராக மட்டுமே இருக்கலாம், மேயரின் அங்கியை அணிவது, காரில்மேயர் கொடியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந் நிலையில் கடந்த மேயர் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தபாலகங்காவை மேயராக அறிவிக்க வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த முறை மேயர் தேர்தலுக்குப் போட்டியிட்ட 20 பேரில் ஸ்டாலினுக்கு 5,68,450 ஓட்டுக்கள் கிடைத்தன.பாலகங்காவுக்கு 5,63,438 ஓட்டுக்கள் கிடைத்தன.

எனவே இரண்டாவது இடத்தைப் பிடித்த பாலகங்காவை மேயராக அறிவித்து கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றுஅதிமுக எம்.பி. மைத்ரேயன் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்விசாரணைக்கு ஏற்றது.

வரும் 5ம் தேதிக்கு இம்மனு மீதான விசாரணை நடக்கும்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X