மதமாற்ற தடை சட்டம் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிராக அமெரிக்கா ஒரு அறிவிப்பு வெளியிட்டால் மாநிலத்துக்கு வரவேண்டிய எல்லா அன்னிய முதலீடும் ஒட்டுமொத்தமாக நின்றுபோய்விடும். இதனால் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி மிக பயங்கரமாக பாதிக்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதில் ஆந்திரம், கர்நாடகம்தான் முன்னணியில் நிற்கின்றன. இந்தியாவுக்குவரும் எந்த வெளிநிாட்டுத் தலைவராக இருந்தாலும், டெல்லிக்கு அடுத்தபடியாக பெங்களூருக்கும்,ஹைதராபாத்திற்கும்தான் செல்கிறார்கள். சென்னைப் பக்கமே யாரும் எட்டிப் பார்ப்பதில்லை.
இந் சூழ்நிலையில் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படுமானால், அமெரிக்கா போன்ற கிறிஸ்தவ நாடுகள்தமிழகத்தை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இதற்கான முயற்சிகளும்தொடங்கிவிட்டன.
அமெரிக்காவைச் சேர்ந்த மத சுதந்திர கமிஷன் இது தொடர்பாக தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும்அமெரிக்க அரசுக்கும் சில பரிந்துரைகச்ை செய்துள்ளது. இதை ஏற்று அமெரிக்க அரசு ஒரு அறிவிப்பைவெளியிட்டால் தொழில் முதலீடுகள் அடியோடு நின்று போகும் அபாயம் உள்ளது.
எனவே இந்தப் பிரச்சினையை தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைவாபஸ் பெறுவதுதான் ஒரே வழி.
நீதித்துறையில் சீர்கேடுகள் மலிந்துவிட்டன. ஏழை, எளிய மக்களும் எளிய முறையில் நீதித்துறையை அணுகும்வகையில் நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். இதனைக் களைய தேசிய நீதிக் கமிஷனை உருவாக்கவேண்டும்.
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன.விரைவில் அவை வெளிவந்து குற்றவாளிகளின் முகத்திரையைக் கிழிக்கும்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், அந்தஅறக்கட்டளையில் வன்னியர் தவிர மற்றவர்கள் இடம் பெறுவது சரியில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.
ஜி.கே. மணியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோருவது, அருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பது போன்றசெயல்களில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இதன்முலம் பா.ம.கவை ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.
எதிர்க் கட்சியினர் வீடுகளில் அதிரடி சோதனைகள், அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தூக்கி அடிப்பதுபோன்ற செயல்களை விட்டுவிட்டு மக்கள் பிரச்சனைகளில் கொஞ்சமாவது கவனம் செலுத்த ஜெயலலிதா அரசுமுன் வர வேண்டும்.
பவானி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுக்க கேரளம் முயல்கிறது. இதனால்கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாட்ட விளை நிலங்கள் பாலைவனமாக மாறும். நீலகிரியில் உருவாகும் இந்த ஆறுகேரளாவுக்குள் நுழைந்துவிட்டு தமிழகம் வருகிறது. அதில் அணையைக் கட்டி நீரை முடக்க கேரளம் முயல்கிறது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தூக்கம் போட்டுத் தான் காவிரியின்குறுக்கே பல அணைகளைக் கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தந்தோம். இப்போது நீருக்கு ஏங்கி நிற்கிறோம். கேரளவிஷயத்தில் உடனே இந்த அரசு விழித்து எழுந்து எதையாவது செய்ய வேண்டும்.
-->












Click it and Unblock the Notifications