பாக். தீவிரவாதிகள் ஊடுருவல் குறைந்துவிட்டது: பத்மநாபன்
சென்னை:
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துவிட்டதாக ராணுவத் தளபதிஜெனரல் பத்மநாபன் கூறினார்.
சென்னையில் புதிய ராணுவ கட்டடத்தைத் திறந்து வைத்து தமிழில் பத்மநாபன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தீவிரவாதிகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு அது 43 முதல் 44 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இந்தியப்பகுதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து வைத்துக் கொண்டதாகவும் அதை நமது படையினர் பின்னர் மீட்டதாகவும் வந்த செய்திகள்தவறு.
15 பேர் கொண்ட பாகிஸ்தான் ராணுவ ரோந்து படையினர் இரு நாடுகளுக்கும் சொந்தமில்லாத பகுதியில் நுழைந்து 3 நாட்கள்உட்கார்ந்திருந்தனர். அதை அறிந்தவுடன் நமது வீரர்கள் போய் அடித்து விரட்டினர். இது தான் நடந்தது.
தீவிரவாதிகள் விஷயத்தில் காஷ்மீரின் புதிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நான் கமெண்ட் அடிக்க விரும்பவில்லை. அம்மாநில அரசு இப்போது தான் பதவிக்கு வந்துள்ளது. அதற்குள் அந்த அரசின் மீது குற்றம் சாட்டும் வகையில் சிலர் பேசுவது அபத்தமானதுஎன்றார் பத்மநாபன்.
-->












Click it and Unblock the Notifications