வேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சங்கரி. இவருக்கு வேலூர் அரசு மருத்துவமனையில்வியாழக்கிழமை இரவு ஆண் குழந்தை பிறந்தது. சங்கரியின் தாயார் தனம்மாள், மகளுக்குத் துணையாகஅருகிலேயே இருந்தார்.

பிரசவ வார்டில் இருந்த ஒரு பெண் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு பால் தருவது, பராமரிப்பது,சிகிச்சை தருவது போன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண்ணை மருத்துவமனை ஊழியர் எனஅனைவரும் நினைத்தனர்.

இந் நிலையில் நேற்று காலை அந்தப் பெண், சங்கரியின் குழந்தையை எடுத்துச் சென்றார். அவருடன் தனம்மாளும்சென்றார். ஆனால், மருத்துவமனையின் பல வார்டுகளுக்குள் நுழைந்து வெளியே வந்த அந்தப் பெண் திடீரென்றுதனம்மாளை ஏமாற்றி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார்.

அந்தப் பெண்ணைத் தேடி மருத்துவமனை முழுவதும் சுற்றி வந்தார் தனம்மாள். பின்னரே தான் ஏமாற்றப்பட்டதைஉணர்ந்தார். உடனே மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள காவல் நிலையத்தில் தனம்மாள் புகார் கொடுத்தார்.

டி.எஸ்.பி. காளி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் பிரவச வார்டு மற்றும் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் எல்லா நேரமும்பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+