வீரப்பனை பிடிக்க ராணுவத்தை அழைக்க வேண்டும்: காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இரு மாநில காவல் துறையினரால் வீரப்பனைப் பிடிக்க முடியாததால் ராணுவத்தை அழைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பனின் தொல்லை அளவு மீறிப் போய்க் கொண்டுள்ளது. இப்போதாவது தமிழகஅரசும், கர்நாடக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும்.
நாகப்பாவின் சாவால், 40 லட்சம் கர்நாடகத் தமிழர்களின் வாழ்க்கை பீதிக்குள்ளாகியுள்ளது. கர்நாடகத்தை விட்டு பல தமிழர் குடும்பங்ள்தமிழகம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறை தோல்வியடைந்து விட்டது என்றார்.
-->












Click it and Unblock the Notifications