சென்னை மேயர் தேர்தலுக்குத் தடை விதிக்க கோர்ட் மறுப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்தக் கூடாது என்று கோரி அதிமுக எம்.பி. மைத்ரேயன் தொடுத்திருந்தமனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேயர் தேர்தல் எப்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து நாளைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றுதேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்.பி. மைத்ரேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், மேயர் பதவியிலிருந்துமு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால், தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்ற அதிமுகவேட்பாளர் பாலகங்காவை மேயராக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மற்றொரு மனுவில், மாநில அரசின் நிதி நெருக்கடியில், இப்போது மீண்டும் மேயர் தேர்தலை நடத்தினால்செலவீனம் ஏற்படும். எனவே மேயர் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,மேயர் தேர்தல் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு வக்கீலிடம்கேட்டனர்.
அப்போது, தேர்தல் தொடர்பான பணிகள் திட்டமிடப்பட்டுக் கொண்டிருப்பதாக அரசு வக்கீல் தெரிவித்தார்.ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், திட்டமிடப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.
நாளைக்குள் மேயர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற தேதியை மாநில தேர்தல் ஆணையம் கோர்ட்டில்தெரிவிக்க வேண்டும்.
மேயர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றுஉத்தரவிட்டு, மைத்ரேயனின் மனுவை நிராகரித்தனர்.
அடுத்து தேர்தல் நடந்தால் அதிமுக சார்பில் பாலகங்கா போட்டியிட நிறைய வாய்ப்பு உள்ளது.
-->