நூற்றுக்கணக்கில் குவிந்த மாட்டு வண்டிக்காரர்கள்: உயர் நீதிமன்றத்தில் பதற்றம்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஒரே நேரத்தில்குவிந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் போலீஸாரும் அங்கு அதிக அளவில் நிறுத்தப்பட்டனர்.
சென்னை நகரில் பகல் நேரத்தில் மாட்டு வண்டிகளை ஓட்டக் கூடாது என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.இதை எதிர்த்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் நகருக்குள் மாட்டு வண்டிகளை ஓட்டியபோது, போலீஸார் அவர்களைத் தடுத்தனர்.இதையடுத்து போலீஸார் மீது உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிஉரிமையாளர்களும், தொழிலாளர்களும் கோர்ட் வளாகத்தில் கூடினர்.
இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனடியாக அங்கு ஏராளமானபோலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 27ம் தேதி வரைமாட்டு வண்டிகளைப் போலீஸார் தடுக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாட்டு வண்டி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கலைந்து சென்றனர்.
-->