For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறந்த கலெக்டர்களுக்கு விருதுகள் வழங்கினார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய கலெக்டர்களுக்கு தங்கப் பதக்கம்,கேடயம் மற்றும் ரொக்கப் பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு இன்று நடந்தது. இதில் ஜெயலலிதாகலந்து கொண்டு உரையாற்றினார்.

கிராமப்புறங்களில் குடிநீர் விநியோகம், தரிசு நில மேம்பாடு, வறட்சி நிவாரணப் பணிகள், மழை நீர் சேகரிப்பு,வறுமை ஒழிப்பு உள்ளிட்ட 27 அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது.

மாநாட்டின்போது சிறந்த கலெக்டர்கள் விருது நான்கு மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டது. மணிவாசகம்(திருச்சி), ராஜாராமன் (காஞ்சிபுரம்), விஜயக்குமார் (ராமநாதபுரம்), ராஜேஷ் லக்கானி (பெரம்பலூர்) ஆகியநான்கு கலெக்டர்களுக்கும் தங்கப் பதக்கம், ரூ.25,000 பரிசு மற்றும் சான்றிதழ்களை ஜெயலலிதா வழங்கினார்.

இதுதவிர மக்கள் குறைகளை உடனுக்குடன் கேட்ட தீர்த்தது, பெண்கள் நலத்திற்காக பாடுபட்டது ஆகிய இரண்டுசேவைகளுக்காக சேலம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பு விருது வழங்கினார் ஜெயலலிதா.

இதுதவிர 20 அம்சத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக சிவகங்கை மாவட்ட கலெக்டர் சந்தோஷ் பாபுஉள்ளிட்ட 15 கலெக்டர்களுக்கும் சிறப்பு விருதுகளை வழங்கினார் முதல்வர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X