பஸ் இன்றி தவிக்கும் பம்மல் மக்கள் சாலை மறியல்
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதியான பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் கன மழையால் சாலைகள் மோசமாகஇருந்ததால் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு சென்னை நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன.பம்மல், பொழிச்சலூர் பகுதியில் உள்ள சாலைகளும் மோசமாக சேதமடைந்தன.
இதனால் டவுன் பஸ்களை ஓட்டவே முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்கு டவுன்பஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டது. சாலைகள் சரியானவுடன் பஸ்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு வாரமாகியும் இன்னும் பஸ் சர்வீஸ் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அலுவலகம், பள்ளி,கல்லூரிகளுக்குப் போவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பம்மல் நகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேற்றுப் பாதையில் பஸ்கள் விடப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதி தந்ததையடுத்துபோராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications