குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசிய உயர் நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர்:
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய ஒட்டாவியோ குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்கமலேசிய உயர் நீதிமன்றம் அனுமதி தர மறுத்துவிட்டது.
ரூ.64 கோடி போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபரான குவாத்ரோச்சி முக்கியக்குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரிப்பதற்காக அவரை இந்தியாவுக்குக் கொண்டு வரும்முயற்சிகளை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது.
தற்போது மலேசியாவில் உள்ள அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அங்குள்ள செசன்ஸ்நீதிமன்த்தில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்திருந்தது.
ஆனால் குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்று மலேசிய செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 2ம்தேதி அம்மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து மலேசிய உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல் முறையீடுசெய்தது.
ஆனால் உயர் நீதிமன்றமும் சி.பி.ஐயின் மனுவை இன்று தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ. தாக்கல் செய்தஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் போதுமானதாக இல்லை என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.
ஆனாலும் சி.பி.ஐ. விடவில்லை. உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை எதிர்த்து மலேசிய உச்ச நீதிமன்றத்தில்(அங்கு அதன் பெயர் "கோர்ட் ஆப் அப்பீல்") சி.பி.ஐ. மேல் முறையீடு செய்துள்ளது. இந்தியாவின் சார்பாகமலேசிய அட்டர்னி ஜெனரல் அலுவலகமே இந்த மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
-->












Click it and Unblock the Notifications