நாளை தமிழகம் வருகிறார் கலாம்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை சென்னை வருகிறார்ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சென்னை வரும் டாக்டர் கலாமுக்கு சிறப்பான வரவேற்புஅளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 10.30 மணிக்கு இந்திய விமானப்படையின் சிறப்பு போயிங் விமானம் மூலம் சென்னை வந்துசேர்கிறார் டாக்டர் கலாம்.
அங்கிருந்து நேராக அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் கலாம், காலை 11 மணிக்கு வெள்ளிவிழாநிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கிறார்.
பின்னர் தரமணியில் உள்ள உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார். அதைத்தொடர்ந்து பகல் 1.15 மணிக்கு ராஜ் பவனுக்குச் சென்று தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் அளிக்கும் மதியவிருந்தில் கலந்து கொள்கிறார். அங்கு பார்வையாளர்களையும் டாக்டர் கலாம் சந்திக்கவுள்ளார்.
அன்று மாலை அண்ணாமலை அரங்கில் நடக்கும் தமிழ் இசைச் சங்கத்தின் இசை விழாவில் கலந்து கொண்டுவிட்டு,நாளை இரவு ராஜ் பவனிலேயே தங்குகிறார்.
அதன் பிறகு நாளை மறுநாள் காலை 11 மணிக்கு மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் டாக்டர்கலாம், அங்குள்ள விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.
அன்று மாலை சென்னை மியூசிக் அகாடமியின் பவள விழாவிலும் டாக்டர் கலாம் கலந்து கொள்கிறார்.
அதன் பின்னர் அன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி கிளம்பிச் செல்வார் டாக்டர் கலாம்.
-->












Click it and Unblock the Notifications