சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது: ராமதாஸ்
சென்னை:
சாத்தான்குளம் சட்டசபை இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது. இந்தத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளப் போவதும் இல்லை.
இருந்தாலும் இந்த இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவுசெய்யவில்லை.
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட நாகப்பாவின் திடீர் மரணம் எனக்குப் பெரும் வேதனையை அளிக்கிறது.
நாகப்பாவின் மனைவி பரிமளா, மகன் ப்ரீத்தம் உள்ளிட்ட குடும்பத்தினரும், கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கேயும் சென்னை வந்து வீரப்பனிடமிருந்து அவரை விடுவிக்க உதவ வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அவர்கள் அவ்வாறு கோரிக்கை விடுத்தும் கூட ஜெயலலிதா மெத்தனமாக நடந்து கொண்டார்.
தமிழக அரசு சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் வீரப்பனிடமிருந்து நாகப்பாவை உயிருடன்மீட்டிருக்கலாம்.
மர்மமான முறையில் நாகப்பா இறந்தது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்ராமதாஸ்.
புதிய வீராணம் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு தமிழகஅரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகவும் ராமதாஸ் கூறினார்.
-->