திருப்பதி கோவிலை சுற்றி புல்லட்-புரூப் கண்ணாடிகள்
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலைச் சுற்றி புல்லட் புரூப் கண்ணாடிகளைப் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் அவ்வபோது கோவில்களைத் தாக்குவதும், கோவில்களில் புகுந்து தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது.இதனால் நாட்டின் அனைத்து முக்கியக் கோவில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
பல கோவில்களிலும் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர்கள் நிரந்தரமாகப் பொறுத்தப்பட்டுவிட்டன. மேலும் குளோஸ்சர்க்யூட் கேமராக்களைப் பொறுத்தி பக்தர்களை போலீசார் கண்காணித்தும் வருகின்றனர்.
இந் நிலையில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் உள்ளதாகக் கருதப்படும் திருப்பதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பலபுதிய திட்டங்கள் அமலாக்கப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக கோவிலைச் சுற்றி கண்ணாடியால் ஆன புல்லட் புரூப் கண்ணாடி அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.
மேலும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அமைக்கப்பட்டுள்ள 4 வழிப்பாதையில் இப்போது கதவுகள் ஆட்களால் திறக்கப்பட்டுமூடப்படுகின்றன. இந்தக் கதவுகளின் செயல்பாட்டை ஆட்டோமேட்டிக் ஆக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதிதிருமலை தேவஸ்தானத்தின செயல் அதிகாரி அஜேயா கல்லம் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications