இந்தியாவை ஏமாற்றிய துபாய்: பாகிஸ்தானில் அனீஸ்
துபாய்:
தாதா தாவூத் இப்ராகிமின் தம்பியும், மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவனுமான அனீஸ் இப்ராகிமை கைதுசெய்த துபாய் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. அவனை பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டதுதுபாய்.
இவனது தம்பி அனீஸ் இப்ராகிம் மீதும் இந்தியாவில் பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள்,மற்றும் பிற சினிமா துறையினரிடம் பணம் பறிப்பது, ரியல் எஸ்டேட் அதிபர்களைக் கடத்தி பணம் பறிப்பது போன்றசெயல்களில் இன்னும் தாவூத் கும்பல் ஈடுபட்டு வருகிறது.
இந்த பணம் பறிப்புகளில் தாவூதுக்கு அனீஸ் முழு உதவி செய்து வருகிறான். இவனும் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருந்தான்.
ஆனால், துபாயிலும் தாவூத் கும்பலுக்கு பெரும் சொத்துக்களும் முதலீடுகளும் உள்ளன. இதனை அனீஸ் தான் மேற்பார்வையிட்டுவருகிறான். இவனையும் தாவூதையும் பிடிக்க இன்டர்போல் உதவியை சி.பி.ஐ. நாடியது.
இந் நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி அனீஸ் பாகிஸ்தானில் இருந்து துபாய் வந்து இறங்கினான். இதை இந்திய உளவுப்பிரிவினர் உடனே இன்டர்போலுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து அவனைக் கைது செய்யுமாறு துபாய் போலீசுக்குஇன்டர்போல் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து அவன் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டான். குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ள இந்தியாவுக்கும் ஐக்கியஅரபு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது. இதனால் அனீசை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐக்கிய அரபுநாடுகளிடம் இந்தியா கோரியது.
அவனை இந்தியா கொண்டு வர சி.பி.ஐ. குழு துபாய் போனது. ஆனால், அவனை சிறையில் இருந்து விடுவித்த துபாய் போலீசார்பத்திரமாக பாகிஸ்தான் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டனர்.
பாகிஸ்தான், சவுதி அரேபிய அரசுகளின் நெருக்குதலால் அவனை இந்தியாவிடம் துபாய் ஒப்படைக்கவில்லை என்றுகூறப்படுகிறது.
-->