டெல்லியில் அதிகாலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
டெல்லி:
டெல்லியில் இன்று அதிகாலை இரு பாகிஸ்தான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
டெல்லியில் இரு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப் பிரிவினர் கண்டறிந்தனர். இதையடுத்து நேற்று இரவில்இருந்து ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தீவிரவாதிகள் ஊடுருவலை அடுத்து தெற்கு டெல்லியில் உள்ள இந்திய விமானப் படைத் தளம், எல்லைப் பாதுகாப்புப் படைமுகாம் அமைந்துள்ள கோட்டை பகுதியில் ரோந்தும் அதிகரிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று அதிகாலை துக்ளகாபாத் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற ஒரு வெள்ளை நிற மாருதி ஜென்காரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், அந்த கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் ஜீப்களில் அந்த காரை விரட்டிச் சென்றனர். நீண்ட தூரம் விரட்டியபிறகு அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அதில் இருந்து இறங்கிய 3 பேர் இருட்டில் ஓட ஆரம்பித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை நோக்கிச் சுட்டனர்.இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். ஒருவன் தப்பியோடிவிட்டான்.
காரில் இருந்த இவர்களது உடமைகளை சோதனையிட்டபோது இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று தெரியவந்தது.
காரில் இருந்த இருந்து 2 ஏ.கே.-47 துப்பாக்கிகள், கிரனைட்கள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி நேற்று தான் ஓராண்டு முடிவடைந்தது. கடந்த 2001 டிசம்பர்13ம் தேதி 4 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர். அந்தத் தாக்குதலில் 9 போலீசாரும் உயிரிழந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.
தங்களது கூட்டாளிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க அதே தேதியில் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்றுஉளவுப் பிரிவினர் ஏற்கனவே மத்திய அரசை எச்சரித்திருந்தனர்.
இந் நிலையில் இந்த இரு தீவிரவாதிகளும் டெல்லியில் ஊடுருவி உள்ளனர். விமானப் படைத் தளம் அல்லது எல்லைப்பாதுகாப்புப் படையின் முகாமை இவர்கள் தாக்கச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தப்பிச் சென்ற 3வது தீவிரவாதியைப் பிடிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
-->
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications