கோவை அருகே காட்டு யானைகளால் கிராம மக்கள் அவதி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் ஆணைக்கட்டி அருகே மலைப் பகுதியிலிருந்து வரும் யானைக் கூட்டத்தால் கிராமமக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
ஆணைக்கட்டி மலைப் பகுதியில் அதிக அளவில் யானைகள் உள்ளன. மலைப் பகுதியில் கடும் நீர்ப் பற்றாக்குறைஏற்பட்டதைத் தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள மாந்தரை என்ற கிராமத்திற்குள் தினசரி மாலையில் இந்தயானைகள் வரத் தொடங்கியுள்ளன.
அந்தக் கிராமத்திலுள்ள செங்கல் சூளைகளில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரைக் குடித்து காலி செய்து விடுகின்றன.
அத்தோடு நிற்காமல் வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து அனைத்து வாழை மரங்களையும் நாசம் செய்கின்றன.கடலை, தட்டைப் பயறு மற்றும் சோளம் ஆகிய பயிர்களையும் மிதித்துத் துவம்சம் செய்து விடுகின்றன.
மாலையில் வரும் இந்த யானைக் கூட்டம் இரவு நெடுநேரம் கழித்தே மலைக்குச் செல்கின்றது. பட்டாசுகளைக்கொளுத்தி விரட்ட கிராம மக்கள் முயன்றாலும், யானைகளிடம் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.
இந்த யானைக் கூட்டத்தின் அட்டகாசத்தால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல்அவதிப்படுகின்றனர்.
வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாந்தரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-->












Click it and Unblock the Notifications