இந்தியாவின் அடுத்த சூப்பர் கம்யூட்டர் பரம்-பத்மா
பெங்களூர்:
இந்தியா உருவாக்கி வரும் பரம்-பத்மா சூப்பர் கம்யூட்டர் அடுத்த மாதம் தயாராகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹை பவர் கம்ப்யூட்டிங் ஆசியா 2002 என்ற மாநாடு பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜீவ் ரத்ன ஷா நிருபர்களிடம் பேசுகையில்,
மத்திய அரசின் சென்டர் பார் அட்வான்ஸ் கம்யூட்டிங் (CDAC) இந்த கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது. TeraflopPARAM-Padma supercomputer என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிவேக கம்யூட்டரின் விலை 5 மில்லியன் அமெரிக்கடாலர்களாக இருக்கும். இது இப்போது சர்வதேச சந்தையில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டரை விட பாதி விலையே ஆகும்.
சிடாக் முன்பு உருவாக்கிய பரம் ரகத்தைச் சேர்ந்த 52 கம்யூட்டர்கள் இப்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் 42கம்ப்யூட்டர்கள் இந்தியாவிலும் 4 கம்யூட்டர்கள் ரஷ்யாவிலும், தலா ஒரு கம்ப்யூட்டர்கள் கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகியநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்போதைய பரம்-பத்மா சூப்பர் கம்யூட்டர்களை வாங்க ரஷ்யா அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இந்த கம்ப்யூட்டர் 16டெராபிளாப் திறன் கொண்டது.
2002-2007ம் ஆண்டுகளில் சூப்பர் கம்ப்யூட்டர் ஆராய்ச்சிகளுக்காக மத்திய அரசு ரூ. 130 கோடியை ஒதுக்கியுள்ளது.
Nano technology எனப்படும் நுண் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கு இனி அதிக முக்கியத்துவம் தரப்படும். இதற்காக ஒருமையமும் அதன் கிளை மையங்களும் நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் Nano electronics, Nano computing, Nano informatics மற்றும் Nano electro mechanicalsystems தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கும் என்றார்.
-->
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications