For Daily Alerts
Just In
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி வீதி வல நிகழ்ச்சி தொடக்கம்
மதுரை:
திருவண்ணாமலை, பழனி கோவில்களில் கிரிவலம் நடைபெறுவது போல, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்ஆடி வீதி வலம் வரும் புதிய வழிபாட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கலெக்டர் சேது ராமச்சந்திரன் இந்தப் புதிய ஆடி வீதி வலம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதன்படி ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும் கோவிலில் உள்ள ஆடி வீதிகளில் பக்தர்கள் வலம் வந்து மீனாட்சிஅம்மனை வழிபடுவர்.
இதன் தொடக்க விழா கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.
-->
Story first published: Tuesday, December 17, 2002, 5:30 [IST]