போலாரிஸ் சாப்ட்வேர் நிறுவன தலைவர் இந்தோனேஷியாவில் கைது
சென்னை & டெல்லி:
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட போலாரிஸ் சாப்ட்வேர் லேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் அருண் ஜெயின்இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யுமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பேங்க் ஆர்த் கிரஹா என்ற வங்கிக்கும் போலாரிஸ் நிறுவனத்துக்கும் ஏற்பட்ட வர்த்தக விவகாரம் தொடர்பாக ஜெயினும் அந்தநிறுவனத்தின் மூத்த அதிகாரியான ராஜிவ் மல்ஹோத்ராவும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த மூன்று நாட்களாகசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்தியாவுக்கான இந்தோனேஷியத் தூதரை டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகள் இன்று நேரில்அழைத்து விளக்கம் கேட்டனர். அருண் ஜெயினை உடனை விடுவிக்க வேண்டும் என அப்போது இந்தியா கோரிக்கை விடுத்தது.
தனது வங்கியின் செயல்பாட்டை கம்ப்யூட்டர்மயமாக்க போலாரிஸ் நிறுவனத்துடன் பேங்க் ஆர்த் கிரஹா ஒப்பந்தம் செய்தது.இதற்காக போலாரிஸ் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் டாலர் பணத்தை அந்த வங்கி வழங்கியது.
இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூலையில் கையெழுத்தானது. இதையடுத்து அதற்கான சாப்ட்வேரை போலாரிஸ் நிறுவனம் எழுதஆரம்பித்தது. இந் நிலையில் திடீரென தங்களுக்கு அந்த சாப்ட்வேர் வேண்டாம் எனவும் பணத்தைத் திருப்பித் தருமாறும் அந்தவங்கி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், இதற்காக ஏகப்பட்ட செலவு செய்துவிட்டதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என போலாரிஸ் கூறிவிட்டது.
இதையடுத்து தனது நிறுவன அதிகாரிகளுடன் அருண் ஜெயின் இந்தோனேஷியா சென்றார். ஜகார்தாவில் உள்ள வங்கியின்அதிகாரிகளுடன் பேசி பிரச்சனையைத் தீர்க்க முயன்றார்.
ஆனால், வங்கிக்குள் அவர்கள் நுழைந்தவுடன் கதவை வெழியில் இருந்து பூட்டிய காவாலாளிகள் அவர்களை ஒரு அறையில்அடைத்தனர். பின்னர் வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தனர். உடனே அவர்களை இந்தோனேஷிய போலீசார்கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர்.
இந்த விவகாரம் இந்திய சாப்ட்வேர் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் தலையிட்டுள்ளார். அருண்ஜெயின் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறிய அவர், ஜெயினுக்கு இந்தியா முழு ஆதரவு தரும். அவரை உடனேவிடுவிக்குமாறு அந் நாட்டு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம் என்றார்.
இந்தியாவின் கம்யூட்டர்துறையின் வர்த்தக சபையான நாஸ்காமும் இந்தோனேஷிய சாப்ட்வேர் வர்த்தக சபையானஅஸ்பிலுகியுடன் பேசி வருகிறது.
-->