காவிரி நடுவர் மன்ற உறுப்பினராக நீதிபதி நியமனம்
டெல்லி:
காவிரி நடுவர் மன்றத்தின் உறுப்பினராக நீதிபதி சுதிர் நாராயண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இப்போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பட்நாயக் நேற்றிரவு இதனை அறிவித்தார். உறுப்பினராக இருந்த நீதிபதி எஸ்.டி. அகர்வால் சமீபத்தில்இறந்ததையடுத்து காலியாக இருந்த இடத்தை நிரப்ப இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் நடுவர் மன்றம் தன்னுடைய இறுதித் தீர்ப்பை வழங்க இருந்தது. ஆனால் நீதிபதி அகர்வால்மரணமடைந்ததைத் தொடர்ந்து நடுவர் மன்றத்திற்கு புதிய உறுப்பினர் நியமிக்கப்படுவம் வரை நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புவெளியாவது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு முன்பு ஒரு முறை நடுவர் மன்ற உறுப்பினர் ஒருவர் மரணமடைந்த போது, புதிய உறுப்பினரை நியமிப்பதற்கு ஆறு மாத காலம்ஆகியது. ஆனால் தற்போது ஒரு மாதத்திற்குள்ளாகவே புதிய உறுப்பினராக நீதிபதி சுதிர் நாராயண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து விரைவில் நடுவர் மன்றம் தன் இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அகர்வாலும் (சமீபத்தில் இறந்தவர்) மற்றொரு உறுப்பினரான நீதிபதி என்.எஸ்.ராவும் சேர்ந்து தான் கடந்த ஜூன் 1991ல் காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்து விட வேண்டும் என்பது குறித்துபரிந்துரைத்தனர்.
அதன்படியே தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நடுவர் மன்றத்தின் தலைவரான நீதிபதிஎன்.பி. சிங் உத்தரவிட்டார். இதைத்தான் ஒழுங்காகத் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது.
இந்த நடுவர் மன்றத்தால் அமைக்கப்பட்டதுதான் காவிரி நதி நீர் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.
-->