For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ கைதை கண்டித்து நாடாளுமன்றத்தில் மதிமுக, மார்க்சிஸ்ட் போர்க்கொடி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்துநாடாளுமன்றத்தில் மதிமுக எம்.பியான சி. கிருஷ்ணன் புகார் கூறினார்.

நேற்று மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பின் வைகோ கைது விவகாரத்தை எழுப்பினார் கிருஷ்ணன். அவர்பேசுகையில்,

வைகோ கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு 156 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்னும் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்படவில்லை.

நேர்மையான, நியாயமான எங்கள் தலைவரை எந்தவிதமான அடிப்படைக் காரணமும் இல்லாமல் தமிழக அரசுபொடா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனுடைய கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் வரவேற்றனர். அக்கட்சியின் தலைவர்சோம்நாத் சாட்டர்ஜி பேசுகையில்,

வைகோவின் அரசியல் கொள்கைகளுடன் எங்கள் கட்சிக்கு வேறுபாடு உள்ளது என்றாலும், அவரை தமிழக அரசுநடத்தும் விதத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

வைகோ மீதான வழக்கு உருப்படியாக நடக்கவில்லை. அவரை ஜாமீனிலும் விடவில்லை.

மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என்றார் சாட்டர்ஜி.

உரிய துறையின் கவனத்திற்கு எம்.பிக்களின் கருத்துக்களைக் கொண்டு செல்வேன் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த்குமார் உறுதியளித்தார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X