ஆந்திராவில் ரசாயன ஆலை விபத்தில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சதாசிவாபேட் என்ற இடத்தில் உள்ள எவரெஸ்ட் ரசாயன ஆலையில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. இதில் இந்த ஆலையின் ஒரு பகுதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் உள்ளே இருந்த 5 பேர் அந்த இடத்திலலேயே பலியாயினர்.
தகவல் அறிந்தவுடன் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். இந்த ஆலையில் மருந்துகளுக்குத் தேவையான ரசாயனப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தவறான கெமிக்கல் ரியாக்ஷன் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications