அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கையா?: காங். இன்று முடிவு
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் கோஷ்டிப் பூசல் மற்றும் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறியோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் இக் கூட்டம் நடக்கிறது. இந்தக் குழுவின் 14 உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
கட்சியினர் மீது உள்ள ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் வெள்ளிக்கிழமை கட்சியின் அரசியல் நிர்வாகக் குழு கூட்டம் நடக்கிறது. இதில் கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் குறித்து அப்போது முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications