"தமிழகத்தின் மோடி" ஜெயலலிதா: இளங்கோவன் வர்ணனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை "தமிழகத்தின் நரேந்திர மோடி" என்றே அழைக்கலாம் என மாநில காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.

காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று சத்தியமூர்த்தி பவனில் அதன் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் இளங்கோவன் பேசுகையில்,

பாண்டிச்சேரியில் ரொட்டி சாப்பிட்ட பள்ளி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளைப் பட்டினியால் வாடச் செய்து, எலிக்கறி சாப்பிட வைக்கும் அளவுக்கு அவர்களை மோசமான நிலைக்குத் தள்ளிய ஜெயலலிதாவுக்கு, பாண்டிச்சேரி சம்பவம் குறித்துக் குறை கூற என்ன யோக்கியதை இருக்கிறது?

இந்துக்களைப் பற்றி பேசியதற்காக கருணாநிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவை சுருக்கமாக "தமிழகத்தின் நரேந்திர மோடி" என்றே அழைக்கலாம். மோடி அங்கே இந்து மதத்தை முன்னிறுத்தி ஓட்டு வேட்டையாடினார். இவர் இங்கு அதைச் செய்து வருகிறார் என்றார் இளங்கோவன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+