நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு: 3 பேருக்கு தூக்கு தண்டனை
டெல்லி:
நீதிபதி விஸ்வேஷ்வர் நாத் காரே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தற்போதைய தலைமை நீதிபதி ஜி.பி. பட்நாயக் கடந்த 42 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
இன்றுடன் நீதிபதி பட்நாயக் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, நீதிபதி காரே உச்ச நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இன்று காலை புதிய தலைமை நீதிபதி காரேவுக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, மக்களவை சபாநாயகர் மனோகர் ஜோஷி, சட்ட அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜி, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் பல அமைச்சர்கள், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1939ம் ஆண்டு மே 2ம் தேதி பிறந்த நீதிபதி காரே, 1961ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தன் பணியைத் துவக்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1996ல் கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி காரே, 1997ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.
நீதிபதி காரே வரும் 2004ம் ஆண்டு மே 2ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். அன்று தான் அவர் ஓய்வு பெறவுள்ளார்.
நீதிபதி எஸ்.பி. பரூச்சா, நீதிபதி பி.என். கிர்பால் மற்றும் நீதிபதி பட்நாயக் ஆகியோரைத் தொடர்ந்து இந்த ஆண்டில் மட்டும் நான்காவது தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நிலபேர ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி பட்நாயக்தான் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால் அதற்குள் அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications