24ம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாள்: ஜெ. தலைமையில் அதிமுக பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 15வது நினைவு தினமான வரும் 24ம் தேதி சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக சார்பில் பேரணி நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி வரும் 24ம் தேதி சென்னையில் பேரணி ஒன்றை நடத்த அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பேரணிக்கு ஜெயலலிதா தலைமை தாங்குவார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து பேரணி புறப்பட்டு கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் முடிவடையும்.
பேரணி முடிவில் அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதா தலைமையில் உறுதிமொழி ஏற்பர் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications