லாரி மீது வேன் மோதல்: 21 கடற்படை வீரர்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பாளையம்கோட்டை:
திருநெல்வேலி அருகே நின்றிருந்த ஒரு லாரியின் மீது கடற்படை வீரர்கள் வந்த வேன் மோதியது. இதில் 21 வீரர்கள் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணா கடற்படை மையத்தைச் சேர்ந்த வீரர்கள் வலநாடு அருகே உள்ள சூட்டிங் ரேஞ்சுக்கு துப்பாக்கிப் பயிற்சிக்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். சில அதிகாரிகளுடன் உடன் சென்றனர்.
மருக்கல்குறிச்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வேன் சாலையோரம் நின்றிருந்த ஒரு லாரியின் மீது படு வேகத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த 21 கடற்படை வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications